Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

கற்றது தமிழ் --- உண்மையான தமிழனின் உணர்ச்சி வெளிப்பாடு

படம் பார்க்கும் போது, நம் தாய் மொழியில் படித்தால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக வேண்டுமா என்று ஒவ்வொரு தமிழனுடைய மனதிலும் தோன்றியிருக்கும். அதேபோல் நானும் படத்தை பார்க்கும் போது என்மனதிலும் தோன்றியது.படத்தை இயக்கியிருப்பது பாலு மகேந்திராவின் சிஷ்யனான ராம் என்பவர்தான்.

படம் மக்களிடத்தில் ஒரு நல்ல செல்வாக்கை பெரும் என்றும் அதே சமயம் லாபத்தை சம்பாதிக்கும் என்றும் இயக்குனர் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு நல்ல திரைக் காவியத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து அவரால் நிறுத்தியிருக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும். இப்படிப்பட்ட நல்ல படங்களை வரவேற்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சினிமாக்காரனின் மறக்க முடியாத ஆசையில் ஒன்று. எனவே மக்கள் அதை புரிந்து கொண்டால் தான், திரைக் காவியத்தை தன வாழ்வில் ஒரு அங்கமாக அமர்த்தி தவறானவற்றை படங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் உண்மை.

பாலு மகேந்திராவின் இன்னும் ஒரு சிஷ்யரான நாம் அனைவருக்கும் தெரிந்த வெற்றிமாறன் அவர்கள், இரண்டு நல்ல காவியங்களை படைத்திருக்கிறார். அவை உங்களுக்காக.. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம்.
எல்லா சிஷ்யர்களும் குருவைப் போலவே இருந்தால் சினிமாவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

படத்தில் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தன் தாய் மொழி தமிழை படிக்க கல்லூரியில் சேர்ந்தால் அங்கே உள்ள வாத்தியாரும் இந்த மார்க்குக்கு நல்ல enggineering college கிடைக்குமே என்று அவனுடைய ஆசையில் பின்னடைவை ஏற்ப்படுத்துவது எவ்வளவு பெரிய ஒரு தவறான விசயமாகும் அதை தெளிவாக அவன் பதில் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தமிழ் படித்து ஒரு பள்ளியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்து வந்தாலும் அவனுடைய மாத வருமானம் 3000-5000 வரை தான் ஆனால் கணிப்பொறியில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரே வருடத்தில் அவர்களுடைய வருமானம் தேவையை விட அதிகமாக கிடைக்கிறது என்பதுதான் உண்மை என்று காட்சிகளில் தெளிவு படுத்தியிருக்கிறார். இன்னும் ஒன்று சொல்ல போனால் அவர்கள் செய்யும் பந்தாவிர்க்கு எல்லையே கிடையாது. படத்தை பார்த்து அனைவரும் இன்னும் சில விசயங்களை தெரிந்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் என்ன தவறு இருக்கிறது. தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருக்கிறது என்பதை எவராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று என்பதை நான் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers