Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

கண்ட்ரோல் -- பிரச்சினையின் முடிவு மரணமா ..



















நம் பொது வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை தான் இந்தப் படத்திலும்காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஆண்டன் கார்பிஜின் என்பவர் .. இப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதை பெற்ற மிகமுக்கியமான படம் ஆகும் ... ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்திற்குபிறகு எந்த ஒரு பிரச்சனையும் வராத வரை சந்தோசமாக தான் வாழ்கிறார்கள் ஆனால் தங்கள் வாழ்க்கையில் அதாவது கணவன் மனைவி இடையே சின்னசின்ன பிரச்சனைகள் வரும் போது அதை இருவரும் சேர்ந்து தான் பேசிதீர்த்துக்கொள்ள வேண்டும் அந்த பிரச்சனைக்கு யாரோ ஒருவரின் மரணம் தீர்வுஅல்ல .. என்பதை சொல்லும் படம் தான் இது .....
இந்தப் படம் 1970 -இல் அனைத்து ராக் இசை ரசிகர்களையும் கட்டிபோட்ட அயன்கர்டிஸ் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம் ....
அயன் கர்டிஸ் வீட்டை விட்டு தனிமையில் வாழ்கிறான் அவனுக்கு ஒரேஆறுதல் அவனுடைய காதலி மட்டும் தான் அவளை நினைத்து பாடல்களையும்கவிதைகளையும் எழுதிக் குவிக்கிறான் .. ஒரு பாடலை மேடையில் பாடும் போதுநிறைய ரசிகர்களை கட்டிப் போடுகிறது அவன் இவ்வாறே முனேறிச்செல்கிறான் தன காதலியையும் மணக்கிறான் .. இவர்கள் வாழ்க்கை நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது அப்போது இனொரு பெண்ணின் தொடர்புகிடைக்கிறது இவளையும் காதலிக்க ஆரம்பிக்கிறான் கர்டிஸ் ....
படம் நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது படத்தை பாருங்கள் .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜப்பான் கடல் சீற்றம் - பிரார்த்தனை செயவோம்















ஜப்பானில் 11.03.2011 அன்று மிகப்பெரிய சுனாமி தாக்கி பல்லாயிரக்கனக்கான உயிர்களை பலி கொடுத்தது ...எனினும் மீதமுள்ள மக்களை காப்பாற்ற நாம்அனைவரும் இறைவனை வேண்டி பிராத்தனை செய்து கொள்வோம் ... அதோடுவிடாமல் கிலே உள்ள இணையதளத்தில் சென்று உங்களால் முடிந்த உதவியைசெய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் ...
http://www.globalgiving.org/

http://www.youtube.com/watch?v=e-A0NDsPcZY

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிங்கம் புலி -- விமர்சனம்


சிங்கத்தை புலியும் புலி சிங்கத்தையும் அடிக்க முடியாது என்பதை இந்தப் படம்மூலம் இயக்குனர் நிருபித்திருக்கிறார் என்று அனைவரும் நினைக்கலாம்அதுதான் இந்தப்படத்தில் எடுபடவில்லை ...ஜீவா எனக்கு பிடித்த நடிகர்களில்ஒருவர் ஆவர் இவர் போய் ஏன்தான் இப்படிப்பட்ட கதைகளில் நடிக்கிறார் என்றுஎனக்கு புரியவில்லை... எல்லா இயக்குனர்களும் ஜீவாவை அவர்களதுஇயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு ஆள்தான் நம்ம ஜீவா ....... ஜீவாவை நல்லநல்ல ரோல்களில் பார்த்த நம் மக்களுக்கு ஒருமாறுதலுக்காக இந்தப் படத்தில் நடித்தாரோ என்னவோ எனக்கு தெரியாது ... ஜீவாவுக்கு சினிமா ரசிகர்களின் வேண்டுகோள் என்னவெனில் நீங்கள் ஒரு மாறுதலுக்காக இப்படிப்பட்ட பட்ட படங்களில் நடிக்கிறீர்கள் அது தவறில்லை ஆனால் ஒரு கமெர்சியல் கதையை தேர்வு செய்யும் போது சில எதார்த்தங்கள் மாறாமல் கதையை தேர்வு செய்யுங்கள் இதுதான் சினிமா ரசிகர்களின்வேண்டுகோள் ஆகும் ....
அச்சில் வார்த்ததுபோல ஒன்றுபோல இருக்கும் இரட்டையர்கள். அவர்களில் ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன். சாமர்த்தியமான இந்தக் கெட்டவனை நல்லவன் எப்படி வெற்றிகொள்கிறான் என்பதே கதை.மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார் ... பொதுவாக சந்தானத்தின்காமெடி சிரிக்கும் படியாக உள்ளன ...தப்பு செய்தவனுக்கு தண்டனை தானாக தேடிவரும் என்பதுதான் உண்மை ...

சிங்கம் புலி -- எது எதையும் வேட்டையாட வில்லை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தி நேம் ஷேக் -- விமர்சனம்


இந்தப் படம் பற்றி சொல்வதற்கு முன்பு பணம் சம்பாதிக்க வெளி நாடு சென்றால்தான் முடியும் என்று எப்படி நம் மக்களுக்கு தோன்றியது என்பதை ஆராய்ந்துஇந்தப் படத்தை இயக்கி இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது எனக்குத்தெரியும் இது உங்களுக்கு புரியாது என்று சற்று நீங்களே யோசித்துப்பாருங்கள்அப்போது உங்களுக்கு புரியும் ...இந்தப் படம் வெளி நாட்டில் செட்டில் ஆகிவேலை செய்யும் போது அடுத்து நம் ஆட்களுக்கு தோன்றுவது கல்யாணம் .... கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டில் ஆகி சிலவருடங்கள் கழித்து
நம் நாட்டிற்க்கு வரும் போது குழந்தைகளுடன் தான் வருவார்கள் ..அம்மா அப்பாஇருவரும் இந்தியன் கல்சரை மறக்க மாட்டார்கள் எனினும் அவர்களுடையபிள்ளைகள் பிறந்தது முதல் அங்கேயே வளர்ந்ததால் அவர்களுக்கு நம்முடைய கல்சர் பற்றி எதுவும் தெரியாது அப்போது அவர்கள் இந்தியாவிற்கு தன்சொந்தபந்தங்களை பார்க்க வரும் போது எப்படி அவர்கள் நம்முடைய கல்சரைமதிக்க வேண்டும் என்று நினைக்க முடியும் அதைப்பற்றி அவர்களிடம்பேசக்குடாது என்பதுதான் உண்மை ....

இதை ஒரு கருவாகக் கொண்டுதான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இந்தஅனைவருக்கும் தெரிந்த இயக்குனர் தீபா மேத்தா அவர்கள் ... இவர் இந்தியாவின்ஒரு புரட்சிகரமான இயக்குனர் ஆவார் ... இந்தப் படம் நான் பார்க்கும் போது என் மனதை மிகவும் உருக்கியது என்பதை நான் மிக உருக்கமாக சொல்கிறேன் ,,,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஹெயமத் (தமிழில் வீடு )-- படம் அலசல்
















ஹெயமத் இந்தப் படம் பதினாறு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு பெரிய படம் என்றும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்திய படமும் ஆகும் ...
இந்தப் படம் 1919 இல் தொடங்கி 1980 இல் முடிவது போல எடுக்கப் பட்டுள்ள ஒருபெரிய படமாகும் ... இதை நான் ஒரு நாள் படித்தேன் ஆனால் இன்னும் நான்இந்தப் படத்தை பார்கவில்லை ... நான் படிக்கும் போது எனக்கு மிகவும்பிடித்திருந்தது ஆதலால் அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளஆசைப்படுகிறேன் ...

அப்படி என்னதான் நூதனமான விஷயத்தை அதில் சொல்லிட்டான். ஒரு கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பிரிதல், கூடுதல், வம்ஸம் விருத்தியாகிறது. குக்கிராமம் ஊராகி நாடு வல்லரசாகி போர் புரிந்து சுடுகாடாகி திரும்ப மறுபிறப்பெடுத்து தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி தனக்கும் இடைப்பட்ட வீழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதாக மீண்டெழுந்து இவ்வளவுக்கும் இடையில் இளம் பெண்ணாக இருந்த ஒருத்தி காதலித்து குழந்தைகள் பெற்று கணவனைப் பிரிந்து வேறொருவனோடும் குழந்தை பெற்று அவனையும் விபத்தில் இழந்து இருபது வருடம் கழித்து வீடு திரும்பிய கணவனை வேறு யாரோவாக பாவித்து முதுமையடைந்து இறக்கிறாள் .
படத்தலைப்பிற்கு அர்த்தம் என்னவோ? அதுவா வேற ஒன்னுமில்லே 'வீடு' என்று பொருள்.
கதை 1919ல் முதல் உலகப் போரிலிருந்து சிமோன் வீடு திரும்புவதில் தொடங்குகிறது.
கதையின் நாயகி மட்டும் 20 லிருந்து 80 வயதுவரை ஒரே பெண்.
முழுமையாக உருப்பெற்று வந்திருக்கும் பாத்திரங்கள் மட்டுமே முப்பதைத் தாண்டும். கோட்டோவியமாய் நான்கு கிறுக்கலில் எழுந்து நிற்பவை மட்டுமே 50 தைத்தாண்டும். ஆனால் சிறு குழப்பமும் இருக்காது, யார் யார் என்னென்னவாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்னவாக ஆகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இருக்கும். பதட்டத்துடன் குறிப்பேட்டைப் புரட்டத் தேவையில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்




















திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2.
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன


1.
திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3.
ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4.
உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


5.
பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


7.
அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.


9.
சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.


10.
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11.
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12.
மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13.
ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14.
திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.


15.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16.
சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.


17.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.


18.
ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்


19.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்


21.
ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்


22.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்


23.
திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers