Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

எஸ்.ஜே. சூர்யா--- கவனிக்கப்பட்ட ஒரு இயககுனர்

எஸ்.ஜே.சூர்யா கவனிக்கப்பட்ட தமிழ் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் சினிமாவிற்கு புது களத்தில் படங்களை தரத்தொடங்கிய சூர்யா அவர்களின் பயணம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அவர் இயக்கிய முதல் படமான வாலி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய ஒரு வெற்றியை அஜித் அவர்களுக்கு தந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது அனைவரும் அறிந்த ஒன்றே..... நான் இன்று (28/03/2011) நான் கே டிவியில் இவர் இயக்கிய வாலி படம் பார்த்தவுடன் தான் சூர்யாவை பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் சூர்யா அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் என்று.
ஆனால் அவர் அடுத்த ஒரு நல்ல படத்துக்கான கதை விவாதங்களில் அமைதியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் மீண்டும் பழைய எஸ்.ஜே.சூர்யா அவர்களை ஒரு நல்ல இயக்குனராக பார்க்கலாம் என்பதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர் இயக்கிய இரண்டாவது படமான குஷி இதுவும் மிகபெரிய ஒரு வெற்றிப் படமாகும். விஜய்க்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்று கூட சொல்லலாம். இவருடைய அடுத்த படைப்பான நியூ ஒரு மிகபெரிய வெற்றிப்படம் என்றும் இதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார் என்று அனைவரும் அறியப்பட்ட ஒன்றே, ஆனால் என்னதான் நினைத்தார்களோ நம் தமிழ் சினிமா இயக்குனர்கள், ஒரு நல்ல படைப்பாளியிடம் நடிப்பு ஆசையை காட்டி விட்டார்கள்.
நியூ படத்தில் நடித்தது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்த ஒன்றே என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நிறைய ஹீரோக்களிடம் சொல்லி யாரும் நடிக்க முன்வராததால் அவரே நடிக்க வேண்டியதாயிற்று. அதை தமிழ் இயக்குனர்கள் யாரும் அறிந்து கொள்ளவில்லையே. இதற்குப் பின்பு சூர்யா அவர்கள் நடிப்பிலே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்துதான் அவருக்கு தொடர்ந்து சறுக்கல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதை அவர் கொஞ்சம் யோசித்து செயல் பட்டிருந்தால் திரும்பவும் தனக்கான ஒரு இடத்தை அவர் நிலைநாட்டி இருப்பார். அதை செய்ய விடாமல் தடுத்து விட்டார்களோ என்னவோ யாருக்கு தெரியும், எனினும் மீண்டும் அவர் ஒரு நல்ல படைப்பை தர வேண்டும் என்று சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் விரும்புகிறான் என்பதுதான் உண்மை ஏனெனில் இப்போதுள்ள சினிமா சூழலில் ஒரு நல்ல படைப்பை பார்ப்பது அரிதாக உள்ளது. சூர்யா அவர்களே நீங்கள் எங்கிருந்தாலும் சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம், விரைவில் உங்களது புதிய படத்தின் அறிவிப்புக்காக ...... இந்தப் பதிவை யாரேனும் எஸ்.ஜே.சூர்யா அவர்களிடம் தெரியப்படுத்துவீர்கலானால் அவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எஸ்.ஜே. சூர்யா இதுவரை இயக்கிய படங்கள் உங்களுக்காக .....
வாலி
குஷி(தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி )
நியூ
நாணி (தெலுங்கு)
அன்பே ஆருயிரே
புலி (தெலுங்கு)
இவை அனைத்தும் ஆகும்..................

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers