Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

நான் படித்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது


சிநேகிதன் கடலாகுதலின் சூத்திரம்



திறந்தே கிடக்கிறது பிரபஞ்சா
முத்த உதடுகளும்
கொஞ்ச மாம்சமும்
இலஞ்ச்சிவப்பு உதட்டுச்சாயம் படிந்த
நிரம்பாத புனித கோப்பைகளும்
பெரு நதிக்குள் இருக்கும் கதவுகள்
கடல்களுக்கு அழைத்துச் செல்கிறது
சுற்றிலும் கடலே இருக்கிறது
கடலை சுற்றிலும் நானே இருக்கிறேன்
சுவாசங்கள் நீராலாகின்றன
பெரு மூச்சுகள் முத்துச் சிற்பிகளாகின்றன
முத்த உதடுகள் கடல் குடிக்கிறன
கொஞ்ச மாமசத்தை பேரன்பு தின்கிறது
பானங்களில் கரைகிறது புனிதக் கோப்பைகள்
கடலுக்கும் எனக்கும் உதடுகளில்லை
அன்பின் நீர்மம் நேர்நிர்ப்பவைகளை குடித்தலைகிறது
மதுச்சுரப்பிகளில் வாய் பதித்திருக்கும்
தீராக் குடிகாரனாகி
கலங்கள் உடைகிறது
சிவந்த மது நூறு கால்களால்
கடல் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது
போதையின் உச்சிகளில்
மௌனங்கள் மலர்கின்ற காலைகளில்
நிதம்ப நதியின் கரையோரம்
இந்திரிய வூற்றின் அருகில்
ஞானம் பெற்றோம்
நாணி மலர்ந்தது ஒளி வட்டம் .......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers