இந்தப்படம் ஒரு திருடன் பற்றிய ஒரு நல்ல படம் என்று எனக்கு தோன்றியதுஅதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ...
இந்தப் படம் ஒரு திருட்டு சம்மந்தப்பட்ட படம் என்று சொன்னதால் உடனேநீங்கள் இந்தப் படத்தில் நிறைய திருட்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்என்று நினைப்பீர்கள் ... அந்த விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் ஒருஅழகான ஒரு காதலையும், ஒருவன் ஒரு நாள் வாழ்வதற்கு என்ன வழிமுறைகள் செய்து கொள்கிறான் என்பதையும் தெளிவாக காட்சி படுத்தி இருக்கிறார்இயக்குனர்...
இதில் ஒருவன் ஒரு நாள் வாழ்வதற்கு என்ன செய்கிறான் என்றால் காலையில்கிளம்பி ஒரு தெருவுக்கு செல்கிறான் அங்கு பூட்டப்பட்டிருக்கும் வீட்டின் கதவில்ஒரு விளம்பர பேப்பரை கதவின் தாப்பாளில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறான்.திரும்பவும் மாலையில் இவன் திரும்பிவரும் போது எந்தக் கதவு திறக்கப்படாமல் இருக்கிறதோ அதை உடைத்துஉள்ளே சென்று அன்று ஒருநாள் மட்டும் தங்கிகொள்கிறான் அடுத்து காலையில்கிளம்பும் போது அங்கிருந்து எதுவும் எடுத்தச் செல்லமாட்டான். இப்படியேஇவனுடைய வேலைகள் தொடர்கிறது......
இப்படியே வேலைகள் தொடரும் போது ஒரு நாள் ஒரு பூட்டிய வீட்டில் நுழையும்போது அங்கு கணவனால் அடிக்கப்பட்ட ஒரு பெண் உள்ளே இருப்பது தெரியாமல்இவன் அந்த வீட்டினுள் உள்ளே சென்று அன்று இரவுதங்கிக்கொள்கிறான்...காலையில் கிளம்பும் போது தான் அவளை எதார்த்தமாக சந்திக்கிறான்.
இதற்கு மேல் நான் இந்தப் படத்தை பற்றி நான் சொன்னால் உங்களுக்கு படத்தைபார்க்க வேண்டிய ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது அதனால் தவறாமல்இந்தப்படத்தை பாருங்கள் .. இதுதான் என்னுடைய வேண்டுகோள் ...
இந்தப்படத்தை இயக்கிய கிம் கி டுக் என்பவர்தான் இவர் கொரியன் சினிமாதுறையில் மிகவும் முக்கியமான ஒருவர் என்று சொல்வதை விட உலகசினிமாவையே புரட்டி போட்டவர் என்று சொல்லலாம்....
த்ரீ-அயன்--விமர்சனம்
7:13 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment